தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிமனிதர் சட்டத்தை கையில் எடுத்தால் அராஜகம் தலைவிரித்தாடும் - உயர் நீதிமன்றம் - individuals takes the law

தனிமனிதரை சட்டத்தை கையில் எடுக்க அனுமதித்தால் அராஜகம் தலைவிரித்தாடி, சொந்த மக்கள் இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனிமனிதர் சட்டத்தை கையில் எடுத்தால் அராஜகம் தலைவிரித்தாடும் - உயர் நீதிமன்றம்
தனிமனிதர் சட்டத்தை கையில் எடுத்தால் அராஜகம் தலைவிரித்தாடும் - உயர் நீதிமன்றம்

By

Published : May 7, 2023, 6:49 AM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த பாபு நாயுடு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், “எங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மாயனம் உள்ளது.

இந்த நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார். எனவே, புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்திலேயே புதைக்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெகதீஷ்வரி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, “உடல் புதைக்கப்பட்ட நிலம் மனுதாரருக்கு சொந்தமானது அல்ல. அதேநேரம், நிலத்தின் உரிமையாளரின் அனுமதியோடு தான் உடல் புதைக்கப்பட்டது” என வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி தண்டபானி, “உடலை புதைக்க நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட, பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது.

கிராமத்தில் மயானம் இல்லை என்றால், அரசு நிலத்தை கண்டறிந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் தான் அந்த நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியும். மேலும், ஜனநாயத்தில் தனிமனிதரை சட்டத்தை கையில் எடுக்க அனுமதித்தால், அராஜகம் தலைவிரித்தாடி சொந்த மக்களுக்கிடையே போர் ஏற்படும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிடப்படுகிறது. இந்த நடவடிக்கைக்காக பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கும் உத்தரவிடுகிறேன்” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கடல் அரிப்பை தடுக்க செயற்கை பாறை: மத்திய, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details