சென்னை: 2015ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாக அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளருக்குப் பேட்டி அளித்திருந்தார்.
இதைத் தனியார் தொலைக்காட்சி (கலைஞர்) செய்தியாக வெளியிட்டது. இந்தச் செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் அமிர்தம் மீது அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் தொடரப்பட்டன.