சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் என பல முன்னணி நட்சட்திரங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் (ponniyin selvan - 2) படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இன்று (ஏப்ரல் 28) முதல் உலகெங்கிலும் வெளியாகியுள்ளது.
மேலும் மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தை எடுத்துள்ளதால், சட்டவிரோதமாக 3,888 இணையதளங்களில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி, படத் தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரொடக்சன்ஸ்' சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.