தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை! - லைகா புரொடக்சன்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ponniyin Selvan
பொன்னியின் செல்வன்

By

Published : Apr 28, 2023, 3:03 PM IST

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் என பல முன்னணி நட்சட்திரங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் (ponniyin selvan - 2) படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இன்று (ஏப்ரல் 28) முதல் உலகெங்கிலும் வெளியாகியுள்ளது.

மேலும் மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தை எடுத்துள்ளதால், சட்டவிரோதமாக 3,888 இணையதளங்களில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி, படத் தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரொடக்சன்ஸ்' சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சௌந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தரப்பில் மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதால் பெருத்த நஷ்டம் ஏற்படும், இதனால் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்" என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதைத் தடுக்கவும் இணையதள சேவை நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Ponniyin Selvan 2: ஆரவாரத்துடன் வெளியானது பொன்னியின் செல்வன்-2; ரசிகர்கள் உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details