தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை - நீதிமன்றம் உத்தரவு - பாஸ்போர்ட் கோரி மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் மீண்டும் விண்ணப்பிக்குமாறு

குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை - நீதிமன்றம் உத்தரவு madras-high-court-has-said-that-there-is-no-impediment-to-issuing-passport-to-person-whose-criminal-case-is-pending
குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை - நீதிமன்றம் உத்தரவு madras-high-court-has-said-that-there-is-no-impediment-to-issuing-passport-to-person-whose-criminal-case-is-pending

By

Published : May 31, 2022, 10:04 PM IST

சென்னை: திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில் தொழில் செய்து வருகிறார். அவர் பாஸ்போர்ட் தொலைந்துவிட்ட நிலையில் இந்தியா திரும்புவதற்காக அவருக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், அவர் கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் திருச்சியில் இருந்தபோது சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக்கூறி, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மலேசியாவில் உள்ள இந்தியத்தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகவும் தனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு உத்தரவிடக்கோரியும் ஷேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று (மே.31) பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்க எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் உத்தரவு தேவை எனவும்; அதுவும் இந்தியாவை விட்டுச்செல்ல வேண்டிய நிலையிருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் அனுமதி வேண்டுமென நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் கோரினால் நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். பாஸ்போர்ட் கோரி மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் மீண்டும் விண்ணப்பிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டுமெனவும் இந்தியத் தூதரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய குடிமக்களுக்கு விமான நிலையங்களில் பிரத்தியேக வரிசை - எம்பி தயாநிதி மாறன் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details