சென்னைஅடுத்த நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தச்சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்பவரை காவல் துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களின் மகள் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி சுவாதியின் தாய் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார். எனவே ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக ரூ.3 கோடி வழங்க வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.