சென்னை: திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே நெருங்கிய உறவினரும், டிரைவருமான இம்ரான் பாஷா என்பவருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது மஸ்தானுக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழப்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தந்தை மஸ்தானின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது மகன் டாக்டர் ஹரீஷ் ஷானவாஸ் அளித்த புகாரில், விசாரணை நடத்திய போலீசார், மஸ்தானின் தம்பி கவுஸ் ஆஸாம் பாஷா, டிரைவர் இம்ரான் பாஷா உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.