தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ள பாதிப்பைச் சீராக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை: வழக்கை எடுக்க நீதிமன்றம் மறுப்பு - சென்னை கனமழை

மழை வெள்ள பாதிப்புகளைச் சீராக்க தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கைகைள் எடுத்துவருவதாகக் குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்தப் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்ததுடன், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவும் மறுத்துவிட்டது.

உயர்நீதிமன்றம் மறுப்பு
உயர்நீதிமன்றம் மறுப்பு

By

Published : Nov 12, 2021, 2:35 PM IST

சென்னை:தலைநகர் சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் கடுமையாக உள்ளதாகவும், உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றும், எனவே உயர் நீதிமன்றம் தலையிட்டு தாமாக முன்வந்து வழக்குத் தொடர வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முறையீடு செய்தார்.

அதற்கு இன்று (நவ. 12) பதிலளித்த தலைமை நீதிபதி, மழை வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்துவருவதாகக் குறிப்பிட்டு, அவை செயல்படுவதற்கு முழுவதும் அனுமதிக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர்.

ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு தொடங்கிய கனமழை நேற்றுதான் ஓய்ந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வருவதைக் குறிப்பிட்டு, தற்போதைய நிலையில் அரசின் பணியில் தலையிட முடியாது எனக் கூறி தாமாக முன்வந்து பொதுநல வழக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.

இதையும் படிங்க: உயர் நீதிமன்றங்களில் அரசின் சார்பில் ஆஜராக 155 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details