சென்னை:தலைநகர் சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் கடுமையாக உள்ளதாகவும், உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றும், எனவே உயர் நீதிமன்றம் தலையிட்டு தாமாக முன்வந்து வழக்குத் தொடர வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முறையீடு செய்தார்.
அதற்கு இன்று (நவ. 12) பதிலளித்த தலைமை நீதிபதி, மழை வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்துவருவதாகக் குறிப்பிட்டு, அவை செயல்படுவதற்கு முழுவதும் அனுமதிக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர்.