சென்னை:சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 140 வளைய சுற்றுத்தர அமைப்புகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 20ஆயிரம் மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இந்தத் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக 7 எண்ணம் துணை மின் நிலையங்களும், 872 எண்ணம் மின்மாற்றிகளும் ஏற்கனவே இயக்கத்தில் உள்ளன. இது தவிர, கீழ்கண்ட மேம்பாட்டு பணிகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்கமானக் கழகத்தால் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதுவரையிலும், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்காக மட்டும் 3ஆயிரத்து 517.50 லட்சம் ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் தொகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தங்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டி செலவிட்டுள்ளது.
இந்த 2022-2023 ஆம் ஆண்டில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் சுமார் 11.45 கி.மீ. தூரத்திற்கு புதிய உயரழுத்த புதைவடங்களும், 21.12 கி.மீ. தூரத்திற்கு புதிய தாழ்வழுத்த புதைவடங்களும் ரூ.455.23 இலட்சம் செலவிலும், 21 எண்ணம் புதிய வளைய சுற்றுத்தர அமைப்புகள் 294 லட்சம் ரூபாய் செலவிலும், 62 எண்ணம் புதிய மின் விநியோக பெட்டிகள் 55.17 லட்சம் ரூபாய் செலவிலுமாக மொத்தம் 804.40 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட உள்ளன.