சென்னை, தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் புதிதாக 3 ஆயிரத்து 500 வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு உள்ளது. தேர்தல் பரப்புரை வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் குறை கேட்பதாக மு.க.ஸ்டாலின், செயலி மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார்.