தமிழ்நாடு

tamil nadu

T Board-க்கு மாறும் சொகுசு வாகனங்கள் - யாருக்கு லாபம்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 6:35 PM IST

Luxury cars allowed T Board service: தமிழக அரசு சொகுசு மற்றும் ஆடம்பர கார்களையும் வாடகை வாகன சேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கும் சூழலில் வாடகை வாகனம் ஓட்டுபவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாடகை வாகன ஓட்டுநர் சங்கத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

Luxury cars allowed T Board service
தமிழக அரசின் அறிவிப்பால் வாடகை வாகனம் ஓட்டுபவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது - வாடகை வாகன ஓட்டுநர் சங்கம்

தமிழக அரசின் அறிவிப்பால் வாடகை வாகனம் ஓட்டுபவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது - வாடகை வாகன ஓட்டுநர் சங்கம்

சென்னை: இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் டி போர்டு அதாவது மஞ்சள் நிற பதிவெண் ப்ளேட்டுடன் விலை உயர்ந்த கார்கள் இயக்கப்படுகிறது. இதே போல் தமிழகத்தில் விலை உயர்ந்த சொகுசு மற்றும் ஆடம்பர கார்களுடன் அனைத்து வகையான வாகனங்களையும் பயன்படுத்திக் கொள்ள, தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது.

இது குறித்து ஏற்கனவே வாடகை வாகன சேவை நிறுவனங்களின் கோரிக்கை தற்போது நிறைவேறப்பட்டிருப்பதாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களைப் போலவே இனி தமிழகத்திலும் மஞ்சள் நிற பதிவெண் பிளேட்டுகள் கொண்ட உயர்ரக கார்கள் பயன்பாட்டில் கொண்டு வருவதைப் பார்க்க முடியும்.

இது குறித்து சுதந்திர வாடகை வாகன ஓட்டுநர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஜூடு மேத்யூ கூறுகையில், "போக்குவரத்துறை அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் எள் அளவிற்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்குப் பயன்கள் எதுவும் இல்லை. இந்த அறிவிப்பால் அதிகளவு தேய்மானமாகி (Scrab) ஓட்டுவதற்குப் பயனில்லாத கார்களுக்கு வருடத்திற்கு 4 முதல் 5 இலட்சம் வரை கட்டணம் கட்டும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

குறிப்பாக இந்த அறிவிப்பு என்பது சொகுசு கார்களை உற்பத்தி செய்யும் பெரும் முதலாளிகள் பயன் பெரும் வகையில் தான் உள்ளது. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள் ஒரு சில குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே உற்பத்தி செய்திருந்தனர் ஆனால் இனி நிலை அப்படி இருக்கப் போவதில்லை.

மாறாக, பெரும் முதலாளிகள் தங்களுக்கு ஏற்றாற் போல் உயர் ரக கார்களை வாங்கி அவைகளையும் டி போர்டுகளாக மாற்றி வணிக பயன்பாட்டிற்கென பயன்படுத்திக் கொள்வார்கள் அப்படி மாறினால் வாடகை வாகன ஓட்டுநர்களின் நிலை என்ன? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

மேலும் கார்களை பெருமளவில் வணிக பயன்பாட்டிற்குப் பயன் படுத்தும் FAST TRACK, NTL போன்ற நிறுவனங்கள் இனி உயர் ரக கார்களை அவர்களின் சொந்த வாகனங்களாக வாங்கி ஓட்டுநர்களை மட்டும் நியமித்தால் போதும் என்ற நிலை இந்த அறிவிப்பால் வரும். பெரிய தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வாடகை வாகனங்கள் இனி வரும் காலங்களில் ஓட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள் அவர்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும்.

இதுமட்டும் அல்லாது குறிப்பிட்ட சீசன்களில் மட்டும் குறிப்பாக சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வோர், விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்களுக்குச் செல்வோர் மற்றும் சுற்றுலா தளங்களில் வாடகை வாகனம் ஓட்டுபவர்கள் என அனைவருமே இந்த அறிவிப்பால் பாதிக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இசையமைப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தீனா போட்டியிடுவதில் என்ன பிரச்சினை? இளையராஜா ஆடியோவால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details