விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நம்பர் லாட்டரியில் பணத்தை இழ்ந்தார்.
இந்நிலையில், மனைவி, மூன்று பெண் குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை தாம்பரம் பகுதியில் திங்கள்கிழமை(ஜூலை 27) செய்தித்தாளில் லாட்டரி விற்பனை குறித்து விளம்பரம் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2003ஆம் ஆண்டு லாட்டரி விற்பனை தடை செய்த பிறகும், இது போன்று ஒரு நம்பர், இரண்டு, மற்றும் மூன்று நம்பர் லாட்டரிகள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் சிலர் ரகசியமாக நம்பர் லாட்டரிகளை விற்பனை செய்து ஆன்லைனில் அதன் முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.