தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனுக்கள் கடந்த டிச.9ஆம் தேதி முதல் பெறப்பட்டு வந்தது.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான ஆய்வு நாளை தொடங்க உள்ள நிலையில், ஏற்கப்படும் வேட்பு மனுக்கள், ரத்து செய்யப்படும் வேட்பு மனுக்கள் உள்ளிட்ட விவரங்களும், நாளை மாலையே தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது.