சென்னை பெசன்ட் நகரில் ரத்தினம் என்பவர் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்பதாக சாஸ்திரி நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ரத்தினம் வீட்டிற்குள் புகுந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரத்தினத்தை காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர். உடனே ரத்தினம் மனைவி உஷா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி கணவரை கைது செய்யக் கூடாது என தெரிவித்தார். ஆனால் காவல் துறையினர் ரத்தினத்தை கைது செய்ததால், உஷா தன் மீது தீ வைத்துக் கொண்டார்.