சென்னையில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நடைபயணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "ஏப்ரலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 471 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் பாஜக தனது முடிவை அறிவிக்கும். பண்பட்ட கட்சி, யார் மனதையும் புண்பட வைக்காது. அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். தேசிய தலைமைக்கும் எங்களுடைய கருத்துகளை கொண்டு சேர்த்துள்ளோம்.