தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 31, 2021, 9:45 PM IST

ETV Bharat / state

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர் புகார்

சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் வழக்கைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடிதம் அமைந்துள்ளதாக வழக்கறிஞர் ராஜராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கறிஞர் புகார்
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கறிஞர் புகார்

சென்னை:பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அண்மையில் எழுதினார். அக்கடிதத்தில், தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இருந்து வருவதாகவும், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரியிருந்தார். அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் அதிகபேரால் பகிரப்பட்டது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் சுப்பிரமணியன் சுவாமி மீது அடையாறு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் இணைய வழியில் புகார் அளித்துள்ளார். அதில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக குறிப்பிட்ட சமூகத்தினரை திசை திருப்பும் வகையில் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துகள் உள்ளதாகவும், இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கடிதம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கறிஞர் புகார்

மேலும், பத்ம சேஷாத்ரி பள்ளியின் மீது நடைபெறக்கூடிய பாலியல் வழக்கை தடுத்து நிறுத்தும் நோக்கிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவரது கருத்துகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட அந்தப்புகாரில், உடனடியாக சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து அடையாறு சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு அழைப்பாணை - தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details