தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 23, 2019, 2:35 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மீண்டும் புயல் அபாயம் - வானிலை ஆய்வு மையம்

சென்னை: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதால் புயல் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுவடைந்து 25ஆம் தேதி குறைந்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இன்னும் இரண்டு நாள்களில் அது, தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்ந்து 29ஆம் தேதி புயலாக வலுவடையும்.

இதன் காரணமாக 29ஆம் தேதியில் இருந்து கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கன மழை வரை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம், தேனி, திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீ வீதம் மழை பதிவாகியுள்ளது.

எனவே, அடுத்த 24 மணி நேரத்தில் உள் தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details