தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2019, 12:27 PM IST

ETV Bharat / state

தற்கொலைக்கு முயன்ற பெண் தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: தற்கொலைக்கு முயன்ற பெண் தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

File pic

சென்னை டி.பி.சத்திரத்தில் வசித்துவருபவர் அருணா. இவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்தார்.

இந்நிலையில், அருணா நேற்று (மே 27) வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனிடையே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருணா சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details