சென்னை: பாரதிய ஜன சங்க நிறுவனர் டாக்டர்.ஷாம் பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு நாள் சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆளுநர் உரை முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டும் உரையாக இருந்தது. இல்லதரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும், கேஸ் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவை குறித்து பேசப்படவில்லை.
திமுக அரசு வந்து 40 நாள் ஆகியுள்ளது. ஆனால் கமிட்டி அமைப்பதை மட்டுமே செய்து வருகின்றனர். நீட் தேர்வு குறித்து ஆராய அமைத்துள்ள கமிட்டி தேவையில்லாத ஒன்று. இதனை கலைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை குழப்பாமல், அவர்களை தயார் படுத்துங்கள்.