தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும்: எல்.முருகன்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும், ஆனாலும் அவர்கள் மக்களையும் மாணவர்களையும் ஏமாற்ற முயற்சி செய்கின்றனர் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

By

Published : Jun 9, 2021, 2:00 PM IST

Published : Jun 9, 2021, 2:00 PM IST

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும்
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும்

சென்னை தி. நகரில் உள்ள கமலாலயத்தில் 1 லட்சம் முகக்கவசங்கள் அரசிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். இன்று 1 லட்சம் முகக்கவசங்களை அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம்.

புதிய அரசு ஆட்சி அமைத்து 30 நாட்கள் கடந்துவிட்டது. பல தாய்மார்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வருகிறது,
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் மாதம் 1000 கொடுப்போம் என்று கூறினார்கள் ஆனால் அதனை தற்போது வரை கொடுக்கவில்லை. எனவே தேர்தல் அறிக்கையில் கூறிய தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும்.

நூலகங்களில் கட்டாயம் முரசொலி நாளிதழ் வாங்க வேண்டும் என அதிகாரதுஷ்பிரோகம் நடந்துள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும். அனைத்து நாளிதழ்களை வாங்க அரசு உத்தரவிட வேண்டும். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான்.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும் ஆனாலும் அவர்கள் மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றுகின்றனர்" என்று எல். முருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேட்டூர் அணை திறப்பு: நடவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம்!

ABOUT THE AUTHOR

...view details