சென்னை:துறைமுகம் ராஜாஜி சாலையில் வைக்கப்பட்டுள்ள வ.உ.சி.யின் திருவுருவப் படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "75ஆவது சுதந்திர தினம் நிறைவடைந்து 76ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். நாட்டின் 100ஆவது சுதந்திர நாளில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக எடுத்துச் செல்ல உள்ளார்.