தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக கே.ஆர்.ராமசாமி நியமனம் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக மூத்த தலைவர் கே.ஆர்.ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

KR Ramasamy
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎ.ஸ்.அழகிரி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் முன்னாள் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கே.ஆர்.ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.