தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு நாடகமாடிய கராத்தே மாஸ்டர்.. அம்பலமானது எப்படி? - sexual harassment cases

கராத்தே கற்று கொடுப்பதாக கூறி 14 வயது சிறுமியை கடந்த ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த கராத்தே மாஸ்டரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பலே நாடகம் நடத்திய கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது!
பலே நாடகம் நடத்திய கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது!

By

Published : Jan 3, 2023, 1:28 PM IST

சென்னை:14 வயது சிறுமியை புத்தாண்டு தினத்தன்று காணவில்லை என அவரது பெற்றோர் மற்றும் கராத்தே மாஸ்டர் ஆகியோர் கண்ணீருடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சிறுமி வீடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "வீட்டின் அருகே இருந்த ஒரு இளைஞருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சிறுமி மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் தனியார் ஹோட்டலில் அறை எடுத்தும் தங்கியுள்ளார். அதேநேரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டின் அருகே உள்ள கராத்தே பள்ளியில் சிறுமி பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்த பள்ளியை 43 வயதான கராத்தே மாஸ்டர் நடத்தி வரும் நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் அங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கராத்தே பயிற்சி வகுப்புக்கு சிறுமி செல்லும் போதெல்லாம், அவரை கராத்தே மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த கொடுமை கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்துள்ளது. மேலும் கராத்தே மாஸ்டர் சிறுமிக்கு 200 ரூபாய் கொடுத்து, நடந்தது பற்றி வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறி வந்துள்ளார். எனவே இதிலிருந்து தப்பிக்க அருகில் உள்ள இளைஞரிடம் சிறுமி பழகி வந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கராத்தே மாஸ்டரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புத்தாண்டு தினத்தின்போது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் துறையினரிடம் சென்றதால், தான் சிக்கி கொள்வோம் என்பதை அறிந்த காரத்தே மாஸ்டர் அக்கறை உள்ளவர்போல நாடகமாடி புகார் அளிக்க வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்ட கராத்தே மாஸ்டர், தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் சிறுமியை தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். எனவே கராத்தே மாஸ்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஒருதலைக் காதல்: இளம்பெண்ணை குத்திக்கொன்று இளைஞர் தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details