சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. புதிய அரசு அமைந்தவுடன் கிராம சபைக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அரசும் தடை விதித்தது.
கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதியளிக்கக்கோரி பல இடங்களில் கிராம சபை மீட்புப் பயணம் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று (செப்.20) தமிழ்நாடு அரசு அக்டோபர் 2ஆம் நாள் காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதியளித்தது.