சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 'உள்ளாட்சி உரிமைக் குரல்' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று (செப்.30) செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "உண்மையான மக்கள் சக்தி உள்ளாட்சித் தேர்தலாகத்தான் இருக்க முடியும். இதனைக் கிராமசபைக் கூட்டங்கள் மூலம் நாங்கள் பரப்பிக் கொண்டு இருக்கின்றோம். மக்கள் கைகளுக்கு அதிகாரம் வர ஆரம்ப அடித்தளம்தான் இது.