தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதாரமாக மரக்கட்டையைக் காட்டிய காவல்துறை - அன்பழகனுக்கு புழல்! - பத்திரிகையாளர் அன்பழகன் சிறையில் அடைப்பு

சென்னை: அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்பனை செய்த வழக்கில் பத்திரிகையாளர் அன்பழகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில், ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது.

anpalagan
anpalagan

By

Published : Jan 12, 2020, 7:29 PM IST

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகி அன்பழகன் நந்தனத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் தனக்கான ஸ்டாலில் தமிழ்நாடு அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக புத்தகத் திருவிழாவை நடத்தும் பபாசி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் அன்பழகனுக்கும் பாபாசி நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை அன்பழகனை சைதாப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். அன்பழகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அமமுக பொதுசெயலாளர் தினகரன், திமுக தலைவர் ஸ்டாலின், ஜவாஹிருல்லா, வைகோ உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சைதாப்பேட்டை சரகத்திற்கான நீதிபதி கவுதமன் வீட்டில் அன்பழகன் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு நீதிமன்ற காவல் உத்தரவினை வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். இதன் பின்னர் அன்பழகனை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நகரின் பல பகுதிகளிலும் சுற்றி வந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன்

மீண்டும் பிணை மனு விண்ணப்பித்துள்ளோம் -பேரறிவாளன் தாய் தகவல்!

இதனையடுத்து மீண்டும் அன்பழகனை நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் பபாசி நிர்வாகத்தினரை அன்பழகன் கட்டையால் தாக்க முற்பட்டார் என மேலும் ஒரு பிரிவில் வழக்கினை சேர்த்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அன்பழகன் தாக்க வந்ததாகக் கூறி காவல்துறையினர் ஒரு மரக்கட்டையை நீதிபதியிடம் காண்பித்தனர்.

அப்போது, அன்பழகனுக்கு ஒரு நாள் மட்டும் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கவுதமன் உத்தரவிட்டார். இந்நிலையில், அன்பழகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details