சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி காலை மற்றும் மாலையில் நடத்தப்பட உள்ளது.
தலைமைச்செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் பணியில் 74 பணியிடங்களும், நிதித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர் பணியில் 29 பேரும், உதவியாளர் பணியில் 49 பேரும், நிதித்துறையில் உதவியாளர் பணியில் 9 பேரும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்தப்பணியில் சேர்வதற்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தில் திருத்தங்களை செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் செய்யலாம். நியமன அலுவலரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் மற்றும் தடையின்மை சான்றிதழை டிசம்பர் 6ஆம் தேதி வரையில் பதிவேற்றம் செய்யலாம்.