ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சராக ஜகர்நாத் மதோ இருந்து வருகிறார். இவருக்கு செப்டம்பர் 25 ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறி இருந்தது. அக்டோபர் ஒன்றாம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அக்டோபர் 19ஆம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 10ஆம் தேதி அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இணை இயக்குனர் சுரேஷ் ராவ் கூறுகையில், "அமைச்சர் ஜகர்நாத் மதோவுக்கு கரோனா தொற்றால் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதனால் அவர் இங்கு வந்தார்.