சென்னை:சிறை அலுவலர் ஆண்கள் 6 பேரும், சிறை அலுவலர் பெண்கள் 2 பேரும் காலிப்பணியிடங்களில் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு 26 ந் தேதி 24 மையங்களில் கம்ப்யூட்டர் மூலம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி இன்று (நவ.30) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிறை அலுவலர் பணியில் ஆண்கள் 6 பேரும், சிறை அலுவலர் பணியில் பெண்கள் 2 பேரும் நியமிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தமிழ்நாட்டில் 7 மையங்களில் கம்ப்யூட்டர் வழியில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.