சென்னை: ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுகளின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மாவட்ட தலைமையிலான போராட்டம் வாக்காளர் சிறப்பு முகாம் காரணமாக வரும் டிசம்பர் 9ஆம் தேதி அன்று நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
கடந்த ஆட்சியின் போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது, அப்போதைய எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு தெரிவித்ததுடன், திமுக ஆட்சிக்கு வந்த உடன் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றி தரவில்லை.
இதன் காரணமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர், புதிய ஒய்வூதையத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதையத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல், தொகுப்பூதிய, தினகூலிப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில், ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழுவின் கூட்டமானது நேற்று (நவ.20) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றுவது குறித்து எந்தவித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஏற்கனவே கடந்த 18.10.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.