ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாவட்டங்களில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மாலை நேரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.