தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்து சமய விழாக்களுக்கு வாழ்த்துவது இந்து சமய அறநிலையத்துறையின் பணியல்ல...!' - செந்தில் குமார் எம்.பி. - எம் பி செந்தில்குமார்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

’கடவுள் வழிபாடு செய்வது இந்து அறநிலயத்துறையின் பணியல்ல...!’ - எம்.பி.செந்தில் குமார்
’கடவுள் வழிபாடு செய்வது இந்து அறநிலயத்துறையின் பணியல்ல...!’ - எம்.பி.செந்தில் குமார்

By

Published : Sep 1, 2022, 4:19 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி நேற்று(ஆக.31) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் ட்விட்டர் பக்கத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துகளை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான்.

கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல" - கலைஞர்.

சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'பள்ளிக்கல்விக்கு நிதி தாருங்கள்' - நிதியமைச்சரை சந்திக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details