சென்னை:பெரியாரின் 144ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை தேனாம்பேட்டை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "மின் கட்டண உயர்வு குறித்து ஆர்.எஸ்.பாரதி பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். சொத்து வரி, குடிநீர் வரி, ஆவின் பொருள்கள் வரை பல்வேறு விலைகளை உயர்த்தி இருக்கின்றனர். மக்கள் கஷ்டப்படுகின்றனர். மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாத அரசாக இருக்கிறது திமுக அரசு.