சென்னை ஐஐடியில் உள்ள சுத்தமான தண்ணீருக்கான சர்வதேச அமைப்பு (ஐசிசிடபிள்யு), நாட்டில் உள்ள தண்ணீர் பிரச்சினைகளைச் சரிசெய்ய புதிய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. அந்த வகையில், நீர்த்துறையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவிற்குள் கொண்டுவருவதற்காக ஜப்பான் நிறுவனமான டி.ஜி. டகானோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைத் தீர்க்கும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்கிட ஐசிசிடபிள்யு மற்றும் டி.ஜி. டகானோ இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஐசிசிடபிள்யுவை ஆதரிக்கும் டி.ஜி. டகானோ, தனது தனித்துவமான அதிநவீன ஜப்பானிய தொழில்நுட்பங்கள் மூலம் புதுமையான தயாரிப்புகள், தொழில்நுட்பங்களை உருவாக்கிட உதவி செய்கிறது. இந்தத் திட்டத்தில் சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் சிலரும் பணியமர்த்தப்படுவார்கள். ஐசிசிடபிள்யு, டி.ஜி. டகானோ ஆகிய இரண்டும் இணைந்து திட்டங்களுடன் தொடர்புடைய புதிய தயாரிப்புகள், சேவைகளை உருவாக்கின்றன.