சென்னையில் இரு தினங்களாகப் பெய்த கனமழையின் காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திருவேற்காடு, வானகரம், அடையாளம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதைத்தொடர்ந்து தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஜனவரி 2 தேதி அயனம்பாக்கத்தை சேர்ந்த வேணுகோபால் அவரது மனைவி இரு மகன்களுடன் அபாயத்தை உணராமல் வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலத்தில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை வெள்ள நீர் அடித்துச் சென்றது. இதில் வேணுகோபால் அவரது மனைவி ஒரு மகனை அருகே இருந்தவர்கள் மீட்டுள்ளனர். அவரது மூத்த மகன் குமரேசன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 மணி நேரம் இந்த பணி நடைபெற்று வருகிறது.