தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணியில் இருந்தபோது துரதிருஷ்டவசமாக உயிரிழக்கும் அரசு மருத்துவர்களுக்கு "குடும்ப நல நிதி வழங்கும் திட்டத்தை" தொடங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மரணமடைந்தால், அவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி கிடைக்கும். இதை ஒரு கோடியாக ரூபாயாக உயர்த்த வேண்டும். இந்தத் திட்டத்திற்கான நிதி, அரசுப் பணியில் இருக்கும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் ஊதியத்திலிருந்து தான் பிடித்தம் செய்யப்படுகிறது. இதில், அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை.