தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை - நடிகை பாலியல் வழக்கு

சென்னை: துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை

By

Published : Jun 20, 2021, 4:07 PM IST

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தமிழ் திரைப்பட துணை நடிகை ஒருவர் காவல் துறையில் மே 28ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இதனால் அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் மதுரை உள்ளிட்ட இடங்களில் அவரைத் தேடி வந்தனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்பிணை மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்தச் சூழலில் மணிகண்டனை தனிப்படை காவல் துறையினர் பெங்களூருவில் வைத்து இன்று (ஜுன்.20) அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

மேலும் அவரை விசாரணைக்காக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மணிகண்டனோடு சேர்த்து அவரது உதவியாளர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக அவருக்கு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: நடிகை பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது

ABOUT THE AUTHOR

...view details