தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தோனேசியாவில் பதக்கம் வென்ற மாணக்கர்களுக்கு உற்சாக வரவேற்பு! - Indonesia's medal winners arrived chennai, People welcoming

சென்னை: இந்தோனேசியாவில் நடைபெற்ற கரத்தே போட்டியில், பதக்கம் வென்ற மாணவ - மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் பதக்கம் வென்ற மாணக்கர்களுக்கு உறசாக வரவேற்பு!
இந்தோனேசியாவில் பதக்கம் வென்ற மாணக்கர்களுக்கு உறசாக வரவேற்பு!

By

Published : Dec 25, 2019, 10:07 PM IST

கடந்த டிசம்பர் 20ஆம் தேதி இந்தோனேசியால் இண்டர்நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சீனா, இலங்கை உள்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பகேற்று போட்டியிட்டனர். இந்த ஆறு நாடுகளிலிருந்து மொத்தம் 400பேர் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் 10 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தை சேர்ந்த ஐந்து மாணாக்கர்கள் கலந்துகொண்டு ஐந்து வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களை வென்றனர்.

பின்னர் நாடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து பயிற்சியாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “போட்டி பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 வெள்ளிப் பதக்கமும்,5 வெண்கலப் பதக்கமும் வென்றனர். போட்டி மிகவும் கடினமாக இருந்தது. கடுமையான பயிற்சி மேற்கொண்டதால் இந்த வெற்றி சாத்தியமானது.

இந்தோனேசியாவில் பதக்கம் வென்ற மாணக்கர்களுக்கு உறசாக வரவேற்பு!

மேலும், இந்த வெற்றி இந்தியாவிற்க்கு மட்டுமல்லாது, தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கராத்தே பயிற்சி மிகவும் அவசிமானது அனைவரும் கராத்தே கற்றுக்கொள்ளவேண்டும். மேலும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதே எங்களது லட்சியம்” என தெரிவித்தனர்.

மேலும் தமிழ்நாடு அரசு உதவியும், ஊக்கமும் அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க...குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய ஆஸி. வீரர்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details