தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2020, 7:50 PM IST

ETV Bharat / state

துபாயிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்!

சென்னை: துபாயில் சிக்கித்தவித்த 154 இந்தியா்கள் ஏா் இந்தியா சிறப்புத் தனி விமானத்தில் நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னை வந்தடைந்தனர்.

ஏா் இந்தியா சிறப்பு தனி விமானம்
ஏா் இந்தியா சிறப்பு தனி விமானம்

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட 154 பயணிகளில் 100 ஆண்களும், 42 பெண்களும், 11 சிறார்களும், ஒரு பச்சிளங்குழந்தையும் அடங்குவர். இவா்கள் ஐக்கிய அரபு நாடுகளில் குடும்பமாக தங்கியிருந்து, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றியவா்கள். இந்த கரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கினால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இதனால் அங்குள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்து, அவர்களை இந்தியா அனுப்பி வைத்தது.

துபாயில் இருந்து சென்னை வந்த இந்தியர்கள்

சென்னை விமானநிலையத்தில் அனைவரையும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வரவேற்றனா். பின்பு அவா்களை தகுந்த இடைவெளிவிட்டு வரிசைப்படுத்தி, மருத்துவ பரிசோதனையோடு குடியுரிமை, சுங்கச்சோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொண்டனா்.

சென்னை விமான நிலையம் வந்த இந்தியர்கள்
அதன்படி இலவச தங்கும் இடங்கள் கேட்ட 64 பேரும் 3 தனிப்பேருந்துகளில், மேலக்கோட்டையூா் விஐடி கல்வி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டனா். மீதி 90 போ் கட்டணம் செலுத்தி, தங்கும் இடங்களான சென்னை மாநகரில் உள்ள 3 விடுதிகளுக்கு, 4 தனிப்பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்னா்.

இதையும் படிங்க:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details