தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துவருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இரண்டே நாளில் ரூ.25,83,000 பறிமுதல் - In two days, 25 lakh flying squads were seized across Tamil Nadu
சென்னை: தேர்தல் பறக்கும் படை சோதனையில் 25 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது என சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
![இரண்டே நாளில் ரூ.25,83,000 பறிமுதல் 25 லட்சம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10845344-thumbnail-3x2-25.jpg)
25 லட்சம்
இந்நிலையில், தற்போதுவரை தேர்தல் பறக்கும் படை சோதனையில் 25 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் உரிய ஆவணம் இல்லாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், மேலும், 335.11 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைக் குழுவினர், மூன்று நிலை கண்காணிப்புக் குழுவினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.