தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 8, 2020, 1:54 PM IST

ETV Bharat / state

முகப்பேரில் தடையை மீறி செயல்பட்ட கார்மெண்ட்ஸ்க்கு சீல்

சென்னை: 144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட கார்மென்ட்ஸ்க்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

in mugaper government Sealed  garment due to overrun in curfew period
in mugaper government Sealed garment due to overrun in curfew period

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவை மீறி செயல்படும் தொழிற்சாலைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையில் மாநகராட்சி, வருவாய், காவல் துறையினர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முகப்பேர் கிழக்கு தொழிற்பேட்டையில் உள்ள கார்மெண்ட்ஸில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருவதாக மாநகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தடையை மீறி செயல்பட்ட கார்மெண்ட்ஸ்

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்த மாநகராட்சி மண்டல அலுவலர், தாசில்தார்,வருவாய் துறை அலுவலர் உள்ளிட்டோர் முன்பக்க வாயிலை மூடிவிட்டு, பின்பக்கமாக தொழிலாளர்களை பணிக்கு வரவழைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதயைடுத்து, தொழிற்சாலையில் பணியாற்றிவந்த தொழலாளர்களை வெளியேற்றிவிட்டு, கம்பெனிக்கு சீல் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கை மீறிய மனமகிழ் மன்றத்திற்கு சீல்

ABOUT THE AUTHOR

...view details