தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறிவிப்பின்றி தொழிற்சாலை மூடல்: தொழிலாளர்கள் போராட்டம்! - Chennai Mahindra Workers protest

சென்னை: அறிவிப்பு இல்லாமல் தொழிற்சாலையை மூடிய நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அறிவிப்பு இல்லாமல் தொழிற்சாலை மூடல்: தொழிலாளர்கள் போராட்டம்!
அறிவிப்பு இல்லாமல் தொழிற்சாலை மூடல்: தொழிலாளர்கள் போராட்டம்!

By

Published : Jun 19, 2020, 7:27 AM IST

செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டியில் செயல்பட்டுவரும் மின்சாதன பொருள்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்துவந்தனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணிமுதல் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னதாகவே திடீரென தொழிற்சாலை நிர்வாகம் ஆலையை மூடி தொழிலாளர்களுக்குப் பணி இல்லை எனத் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து செய்வது அறியாது நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுடன் 600 தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகம் முன்பு கையில் செல்போன் டார்ச்சை அடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...'இனி தண்ணீர் லாரி வந்தவுடன் ஓட வேண்டியதில்லை' - குடிநீர் வாரியத்தின் முயற்சிக்கு சென்னைவாசிகள் வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details