சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மருத்துவர் அமலி விக்டோரியாவுக்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்துவந்த இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் அமலியைத் துன்புறுத்தியுள்ளனர்.
2007ஆம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த அமலி, பிரசவத்துக்குப் பின் கணவர் வீடு திரும்பியபோது, அவரை வீட்டு வேலைகளைச் செய்ய வற்புறுத்தியதுடன், அவரது பெயரில் உள்ள சொத்துகளை எழுதிவைக்கச் சொல்லி சித்ரவதை செய்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அமலி, 2014 நவம்பர் 5ஆம் தேதி குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
வரதட்சணை கொடுமை
இதையடுத்து, மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள், தந்தை ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின்கீழ் அயனாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, மருத்துவர் அமலியின் கணவர், மாமியார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருவருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தந்தை விடுதலை செய்யப்பட்டார்.
மருத்துவர் தற்கொலை