தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோத மணல் விற்பனை வழக்கு; தனியார் பங்குதாரர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு! - மணல் குவாரி

Madras High Court: சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடைக்கோரி தனியார் மணல் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு வழக்கு
சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 6:56 AM IST

Updated : Jan 5, 2024, 7:17 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆர்.எஸ். கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர்களான சென்னையை சேர்ந்த ராஜ்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகம் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கலை சேர்ந்த ரெத்தினம் ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சம்மனை ரத்து செய்யக்கோரி மூவரும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று (ஜன.4) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில், அமலாக்கத்துறையின் வழக்கில் தங்களது பெயர் சேர்க்கப்படாத நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவசர கதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் மூவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

மேலும், சம்மனை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை டிச.30ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜன.5) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சாட்சியங்கள் பதிவு..!

Last Updated : Jan 5, 2024, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details