இயந்திரம் மற்றும் வாகனங்களின் உராய்வினால் ஏற்படக்கூடிய தேய்மானத்தைக் குறைப்பதற்காக லூப்ரிகன்ட் ஆயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆயில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட பின்னர் வியாபாரிகள் மிக குறைந்த விலையில் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் இந்த ஆயிலில் உள்ள துகள்களை மிக நுணுக்கமாகப் பிரித்து எடுப்பதன் மூலம் மிகவும் மெலிதான கிராப்பின் என்ற ஒரு மூலப்பொருளை ஐஐடி நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் மெக்கானிக்கல் துறை உதவிப் பேராசிரியர் சத்யன் சுப்பையா கூறுகையில், ‘நாம் வழக்கமாக பயன்படுத்தும் பென்சிலில் உள்ளது கிராபைட். இதனைப் படிப்படியாக ரசாயன கலவை மூலம் பிரித்தால் கிராப்பின் வரும். இதுபோன்ற கிராப்பின் பொருள் மின்சக்தி கடத்துவதுடன், வலிமையாகவும் இருக்கும். நாம் தற்போது விமானங்களை அலுமினியத்தில் இருந்து மாற்றி எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் மூலம் தயாரித்து வருகிறோம். அதுபோன்ற சூழ்நிலையில் விமானம் வானில் பறக்கும்போது மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது.