சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ’காலநிலை மாற்றம் காரணமாக எல்லை தாண்டிய இடம்பெயர்வுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நெறிமுறை கட்டமைப்பை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப கட்டத்திலேயே சரியான நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
சென்னை ஐஐடி மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியர் சுதிர் செல்லராஜன் கூறுகையில், "சமீபத்திய ஆண்டுகளில், காலநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அபாயங்கள் அதிகரித்ததால் அதிக அளவில் இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் குடிசைப்பகுதிகள் இதற்கு சான்றாகும். மழை வெள்ளம், கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வங்கதேச தலைநகருக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.