செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். சிவசங்கர் பாபா டெல்லியில் நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 16) பிற்பகலில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இரவோடு, இரவாக பாபாவை சென்னைக்கு சிபிசிஐடி காவலர்கள் அழைத்து வந்தனர்.