ஐடிபிஐ (IDBI) வங்கியை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சிஎச் வெங்கடாலசம், மத்திய அரசு ஐடிபிஐ வங்கியில் குறைந்தபட்சம் 51 விழுக்காடு பங்குகளைக் கையில் வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் அந்த வங்கியின் வாராக்கடனை வசூல் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறிக்கையில், "வங்கியை தனியார் நிறுவனத்துக்கு விற்றால், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு திரும்பப்பெறப்படும். இது வேலை இல்லாத இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி