சென்னை தலைமை காலனி ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் உமா மகேஷ்வரி. தலைமை செயலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது முதல் கணவரை பிரிந்த நிலையில், இரண்டாவதாக லோகநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மகளுக்கு ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு உமா மகேஷ்வரி சென்றுள்ளார். அப்போது ஆயுதப்படை காவலரான லட்சுமிபதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக உமா மகேஷ்வரிக்கு லட்சுமிபதி உதவியதாக கூறப்படுகிறது.
கடன் கொடுத்த காவலர்
பின்னர் நாளடைவில் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உமாமகேஷ்வரிக்கு சுமார் ரூ. 4 லட்சம் வரை லட்சுமிபதி கடனாக பெற்றுத் தந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரின் திருமணத்தை மீறிய உறவு குறித்து உமா மகேஷ்வரியின் கணவர் லோகநாதனுக்கு தெரியவந்துள்ளது.