இட நெருக்கடியை குறைக்கும் விதமாக பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் ஒரு துணைக்கோள் நகரம் உருவாக்கப்படுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருமழிசையில் 311 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 121 ஏக்கர் நிலங்களில் தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் வெளிப்படையாகவும் சாமானிய மக்களால் பயன்படுத்தக்கூடிய அளவிலும் வீடுகளுக்கான விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக புதிய சாலைகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன என்றார்.