தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹிப் ஹாப் ஆதி வீட்டில் கல் வீச்சு... இருவர் கைது... - hip hop adhi house attack

சென்னை கிழக்கு கடற்கரை அவென்யூவில் உள்ள ஹிப் பாப் ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

குடிபோதையில் இசையமைப்பாளரும்,நகடிகருமான ஹிப் பாப் ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இருவர் கைது.
குடிபோதையில் இசையமைப்பாளரும்,நகடிகருமான ஹிப் பாப் ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இருவர் கைது.

By

Published : Apr 27, 2022, 5:28 PM IST

சென்னை:கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள சீ கிளிப் அவென்யூ 5ஆவது தெருவில் ஹிப் பாப் ஆதியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்றிரவு காரில் வந்த சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், வீட்டின் ஜன்னல், கண்ணாடிகள் உடைந்தன.

அப்போது வீட்டில் யாருமில்லாததால், எதிர் வீட்டார் கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது அங்கு வந்த காரின் பதிவெண் நீலாங்கரை முகவரியில் இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், வடபழனியை சேர்ந்த பிரேம்குமார்(24), மதுரையை சேர்ந்த அர்ஜீன்(24) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ரசிகர்களுடன் 'சிவகுமாரின் சபதம்' படம் பார்த்த ஆதி!

ABOUT THE AUTHOR

...view details